பாம்பும் விவசாயியும்
(The Farmer and the Snake Story in Tamil)
அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.
பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.
அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.
பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.
நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.
பாம்பும் விவசாயியும் - ஈசாப் நீதிக் கதைகள். Aesop's
Fables - The Farmer and the Viper (Snake). Read Snake (பாம்பு) And The
Farmer (விவசாயி) Story Online In Tamil Language With Pictures For Kids.
பாம்பும் விவசாயியும் | The Farmer and the Snake in Tamil
Reviewed by Dinu DK
on
January 27, 2014
Rating:

உண்மை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteHelp All. But be cautious.
ReplyDeleteGood moral to children
ReplyDeleteThis storey moral is true ...so think
ReplyDelete